12th Tamil Test 22 – தமிழர் குடும்ப முறை | TNPSC Exams 2024

1. பக்தவத்சலபாரதி எழுதிய நூல்களில் பொருந்தது

  1. தமிழர் குடும்ப முறை
  2. தமிழர் மானிடவியல்
  3. தமிழகப் பழங்குடிகள்
  4. தமிழர் உணர்வு
Answer & Explanation
Answer:– தமிழர் உணர்வு

2. கூற்றும் காரணமும்

கூற்று (A): குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை, திருமணமே.
காரணம் (R): குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல.

  1. கூற்று (A) சரி; காரணம் (R) தவறு
  2. கூற்று (A) தவறு; காரணம் (R) சரி
  3. கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) ஆனது கூற்று (A)-வினை விளக்கவில்லை
  4. கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) ஆனது கூற்று (A)-வினை விளக்குகிறது.
Answer & Explanation
Answer:– கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) ஆனது கூற்று (A)-வினை விளக்குகிறது.

3. குடும்பம் என்ற சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல்

  1. தொல்காப்பியம்
  2. திருக்குறள்
  3. புறநானூறு
  4. அகநானூறு
Answer & Explanation
Answer:– திருக்குறள்

4. தவறானவற்றை கூறுக

  1. மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கு – தம்மனை, நும்மனை
  2. தற்காலிகத் தங்குமிடம் – வளமனை
  3. திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் – தன்மனை
  4. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடிய தொடக்கக்
    கட்டம் – மணந்தகம்
Answer & Explanation
Answer:– தற்காலிகத் தங்குமிடம் – வளமனை

5. தாய் வழியாகவே குலத் தொடர்ச்சி குறிக்கப்பட்டதற்கு _______ கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

  1. பதிற்றுப்பத்து
  2. பட்டினப்பாலை
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை
Answer & Explanation
Answer:– பதிற்றுப்பத்து

6. கீழ்காண்பவற்றில் புறநானூறில் குறிப்பிடப்படதாதவற்றை கூறுக

  1. சிறுவர்தாயே பேரிற் பெண்டே
  2. செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
  3. வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
  4. என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
Answer & Explanation
Answer:– என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

7. மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது தலைவிக்குச் சிலம்புகழி நோன்பு செய்தவர்

  1. தலைவியின் தாய்
  2. தலைவனின் தாய்
  3. தலைவனின் தோழன்
  4. தலைவியின் தோழி
Answer & Explanation
Answer:– தலைவனின் தாய்

8. நற்றாய் என்பதன் பொருள் தருக

  1. செவிலித்தாய்
  2. பெற்ற தாய்
  3. வளர்ப்புத்தாய்
  4. உடன் பிறந்தவள்
Answer & Explanation
Answer:– பெற்ற தாய்

9. பொருத்ததுக

1. Extended Familyநெருக்கமான குடும்பம்
2. Immediate Familyவிரிந்த குடும்பம்
3. Nuclear Familyதொடக்கநிலை குடும்பம்
4. Elementary Familyதனிக்குடும்பம்
  1. 4, 3, 2, 1
  2. 4, 3, 1, 2
  3. 2, 1, 3, 4
  4. 2, 1, 4, 3
Answer & Explanation
Answer:– 2, 1, 4, 3

10. மறியிடைப் படுத்த மான்பிணை போல் மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர் என்று குறிப்பிடும் நூல்

  1. அகநானூறு
  2. தொல்காப்பியம்
  3. ஐங்குறுநூறு
  4. நாலடியார்
Answer & Explanation
Answer:– ஐங்குறுநூறு

11. Patrilocal கலைச்சொல் தருக

  1. தந்தையகம்
  2. தாயகம்
  3. குடும்பம்
  4. கடும்பு
Answer & Explanation
Answer:– தந்தையகம்

12. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப (lineally extended family) முறையை கூறுபவர்

  1. ஒளவையார்
  2. ஒக்கூர் மாசாத்தியார்
  3. கபிலர்
  4. தேவகுலத்தார்
Answer & Explanation
Answer:– ஒக்கூர் மாசாத்தியார்

13. மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள நூல்

  1. நெடுந்தொகை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. பதிற்றுப்பத்து
Answer & Explanation
Answer:– குறுந்தொகை

14. ________  சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும்

  1. ஆண் மைய
  2. பெண் மைய
  3. சங்ககால
  4. இருண்டகால
Answer & Explanation
Answer:– ஆண் மைய

 

Leave a Comment