1. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு _________ அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் கூறியுள்ளார்.
- குற்றங்கடிதல்
- செங்கோன்மை
- கொடுங்கோன்மை
- மடியின்மை
2. துஞ்சல் எதிர்ச்சொல் தருக
- சோம்பல்
- சுறுசுறுப்பு
- புறங்கூறுதல்
- வலியுறுத்தல்
3. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுவரோவியமான ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்டும் பணியாளரும் ஓவியம் உள்ள இடம்
- திருநெல்வேலி
- திருச்சி
- மகாபல்லிபுரம்
- தஞ்சாவூர்
4. வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தவர்
- பரதன்
- தசரதன்
- ராமன்
- வாலி
5. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு வணிகம் நிகழும் இடமாக ________ திகழ்ந்தது.
- ஆந்திரப்பிரதேசம்
- கர்நாடாகம்
- கேரளம்
- தமிழ்நாடு
6. கடல் – குறிக்காத சொல்
- அளம்
- ஈண்டுநீர்
- அலயம்
- புணர்ப்பு
7. உரோமாபுரி சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் எனக் குறிப்பிடும் நூல்
- பட்டினப்பாலை
- பதிற்றுப்பத்து
- சிலப்பதிகாரம்
- பரிபாடல்
8. “நீரின் வந்த நிதிர்பரிப் புரவியும்” என்ற பாடல் வரிகள் மூலம் குதிரைகள் இறக்குமதியை குறிப்பிடும் நூல்
- பட்டினப்பாலை
- பதிற்றுப்பத்து
- சிலப்பதிகாரம்
- பரிபாடல்
9. காவிரிப் பூம்பட்டிண துறைமுகத்திலிருந்து வெளியே செல்லும் பொருட்களுக்கு ________ சின்னத்தை பொறித்து வெளியே அனுப்பினர்
- புலி
- இரட்டை மீன்
- வில்
- யானை
10. சங்க இலக்கியத்தின் வாயிலாக மிகப் பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் அறியப்படும் இடம்
- கொற்கை
- காந்தளூர்
- பூம்புகார்
- முசிறி
11. கூற்றினை ஆராய்க
கூற்று 1: ஸ்ட்ரேபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்.
கூற்று 2: தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும்
ரோமானியர்களுக்குமிடையே இருந்த வணிக உறவு இலக்கியம் மூலமும் தெரிகிறது .
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1, 2 சரி
12. கூற்றினை ஆராய்க
கூற்று 1: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான்.
கூற்று 2: பகை நாட்டுச் செல்வங்களளைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தில் இடம் பெற்றுள்ளன.
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1, 2 சரி
13. “கல்லாரே யாயினும் கற்றாரைச் சேந்ந்ததொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்” பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
- அறவுரைக்கோவை
- நீதிச்சாரம்
- திருவாரூர் நான்மணிமாலை
- நாலடியார்
14. 126 ஒற்றை வரிகளில் எழுதிய துளிகள் என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர்
- ஹிராக்ளிடஸ்
- ஷேக்ஸ்பியர்
- எர்னஸ் ஹெமிங்வே
- கால்டுவெல்
15. வெ.இறையன்பு எழுதிய நூல்களில் பொருந்தாதது
- வாய்க்கால் மீன்கள்
- ஐ.ஏ.எஸ் வெற்றி படிக்கட்டுகள்
- ஏழாவது அறிவு
- உள்ளொலிப் பயணம்
16. பொருத்துக
1. அதிசய மலர் | வெ.இறையன்பு |
2. மூளைக்குள் சுற்றுலா | தமிழ்நதி |
3. தேயிலைத் தோட்டப் பாட்டு | ஐராவதம் மகாதேவன் |
4. சங்க காலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும் | முகம்மது இராவுத்தர் |
- 2, 1, 4, 3
- 1, 2, 3, 4
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2