Daily Current Affairs
Here we have updated 30th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு காவலர் தினம்
- ஆண்டுதோறும் செப்டம்பர் 6 தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- இத்தினமானது 6 செப்டம்பர் 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றபட்டதன் நினைவாக தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.
திறன் திட்டம்
- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திறன் திட்டம் (Thiran) தொடங்கப்பட உள்ளது.
- தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான திறனை மேம்படுத்த தொடங்கப்பட உள்ளது.
சொல் நீக்கம்
- ஆதிக்கத்தின் அடையாளமும் தீண்டாமையின் குறியீடாக விளங்கும் காலனி என்ற சொல் நீக்கபடுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- இதன் மூலம் காலனி என்ற சொல் அதிகாரப்பூர்வ பதிவுகள், பொது பயன்பாடு ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட உள்ளது.
இராணுவச் செலவு
இராணுவங்களுக்கு செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – அமெரிக்கா
- இரண்டாவது இடம் – சீனா
- மூன்றாவது இடம் – ரஷ்யா
- நான்காவது இடம் – ஜெர்மெனி
பண்டிட் சதுர்லால்
- தபேலா இசைக்கருவியில் சிறந்து விளங்கிய பண்டிட் சதுர்லாலின் நூறாவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்
- மகுவாடனர் ஓநாய் சரணாலயம் ஜார்க்கண்ட்டில் அமைந்துள்ளது.
புவனேஸ்குமார்
- UIDAI-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- UIDAI – Unique Identification Authority of India
மார்க் கார்னி
- கனடாவின் பிரதமராக மார்க் காரனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
முக்கிய தினம்
ஆயுஷ்மான் பாரத் தினம் (Ayushman Bharat Day) – ஏப்ரல் 30