Daily Current Affairs
Here we have updated 28th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பல்லுயிர் பாரம்பரிய தளம்
- திண்டுக்கல்லிலுள்ள காசம்பட்டி வீரகோவில் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது தமிழ்நாட்டின் 2வது பல்லுயிர் பாரம்பரிய தளமாகும்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளம் – அரிட்டாம்பட்டி
முட்டை உற்பத்தி
- முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
- முதல் இடம் – ஆந்திரபிரதேசம்
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு
- இறைச்சி உற்பத்தி – 6வது இடம்
- பால் உற்பத்தி – 11வது இடம்
பாம்பன் பாலம்
- இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலமானது வருகின்ற ஏப்ரல் 6-ல் திறக்கப்பட உள்ளது.
- இந்தியாவில் செங்குத்து லிப்ட் ஸ்பானை கொண்டிருக்கும் முதல் பாலம் இதுவாகும்.
தொடர்புடைய செய்திகள்
- பழைய பாம்பன் பாலமானது 1914ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வங்கி ஒழுங்குமுறை சட்டம் மசோதா
- அண்மையில் வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
- இம்மசோதா மூலம் வங்கிக் கணக்கில் 4பேர் வரை நாமினியாக சேர்க்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா
- ஹரியானா அரசு சாரதி என்னும் AI சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
பதவிக்காலம் உயர்வு
- கூட்டுறவு வங்கி இயக்குநர்களின் பதவிக்காலம் 10 ஆண்டுகளாக உள்ளது.
- அண்மையில் இயக்குநர்களின் பதவிக்காலம் 8 ஆண்டிலிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்
- இந்தியாவில் கூட்டுறவு கல்வி பயிற்சிக்காக குஜராத்தில் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது.
பால்பன் கி கவிதா
- தாய்மொழிகளில் குழந்தைகளுக்காக படிப்பு தரத்தை மேம்படுத்த பால்பன் கி கவிதா திட்டத்தினை கல்வித்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
சுமீத் ரெட்டி
- பூப்பந்து (Badminton) விளையாட்டு வீரரான சுமீத் ரெட்டி தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
தேசிய கடல்சார் விளையாட்டு போட்டி 2025
- தேசிய கடல்சார் விளையாட்டு போட்டி 2025 நவிமும்பையில் நடைபெறுகிறது.