Daily Current Affairs
Here we have updated 26th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தேசிய விருது
- நீர்வள மேலாண்மைக்கான தேசிய விருதானது தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.
புதிய மாநகராட்சிகள்
- சமீபத்தில் தமிழகத்தில் புதிதாக பெரம்பலூர், இராமநாதபுரம் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் தற்போது 27 மாநகராட்சிகள் உள்ளன.
அகழாய்வு
- சமீபத்தில் ஆதிச்சநல்லூரில் சிலம்பு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இதன் காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சிலம்பு என்பது ஆயக்கலை 64-ல் ஒன்றாக கருதப்படுகிறது.
- சிலம்பு என்பதன் பொருள் – ஒலித்தல்
- முருக கடவுளுக்கு சிலம்பன் என்ற பெயரும் உள்ளது.
சராசரி மழையளவு
- தமிழ்நாட்டின் சாராசரி ஆண்டு மழையளவு 965.6 மிமி ஆக உள்ளது.
தனிநபர் மின்சாரம்
- தமிழ்நாட்டின் தனிநபர் மின்சார பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- புதுபிக்கத்தக்க ஆற்றலில் தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது.
- புதுபிக்கத்தக்க ஆற்றலில் காற்றாலை முதலிடம் பிடிக்கிறது.
தேசிய பணிக்குழு
- உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநலக் கவலைகளைத் தீர்க்கவும், மாணவர் இறப்பினைத் தடுக்கவும் தேசிய பணிக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- இதன் தலைவராக ரவீந்திர பட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்தக்குழுவினை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
காசநோய் முக்த பாரத் அபியான் பிரச்சாரம்
- கடந்த டிசம்பர் 7-ல் இந்தியாவின் 455 மாவட்டங்களில் 100காசநோய் முக்த பாரத் அபியான் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
ஜகெய்மே பயிற்சி
- இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே ஜகெய்மே என்ற பெயரில் கூட்டு கடற்படைப் பயிற்சி நடைபெற உள்ளது.
உணவு கழிவு குறியீடு
- இந்தியாவின் தனிநபர் வீட்டு உணவு கழிவு 55 கிலோவாக உள்ளதாக உணவு கழிவு குறியீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
சங்கீத கலாநதி விருது 2025
- வயலினில் சிறந்து விளங்கிய ஆர்.கே.ஸ்ரீராம் குமார் என்பவருக்கு சங்கீத கலாநதி விருது வழங்கபட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சங்கீத கலாநதி விருது 2024 – டி.எம்.கிருஷ்ணா